Friday, July 17, 2009

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி ...

தட தட ...தட தட
நெல்லை எக்ஸ்பிரஸ் காற்றையும் விட வேகமாக தண்டவாளத்தில் விரைந்து ஓடியது. ஜன்னல் கம்பிகளின் இடுக்கில் தெரிந்த பச்சை வயலை சுற்றி வளைக்க இரண்டு பிஞ்சு கைகள் விரைந்தன.
"தேவி! கையை உள்ளை வை. இல்லேன்னா , எலெக்ட்ரிக் கம்பி-ல அடிபட்றும்."
சிணுங்கி கொண்டே அவள் கையை உள்ளே இழுக்க,
" அதுக்கெல்லாம் என்னை மாதிரி சூர புலியா இருக்கணும்la" nu காலரை தூக்கி விட்டான் அவள் அண்ணன் ரமேஷ்.
"ஏல ரமேஷு உனக்கு தனிய sollanumaala? ஸ்டேஷன் வரை வரைக்கும் ரெண்டு பேரும் சும்மா இருக்க மாட்டீங்களா?

வாஞ்சி மணியாச்சி.
"அம்மா திருநெல்வேலியா இது?"
"இல்லை மணியாச்சி"
"அச்சோ! அப்போ பெட்டி எடுங்க, அண்ணா வா இறங்கணும்"
"இல்லை தேவி. மணியாச்சி ஊரு. ஜங்ஷன் வரதுக்கு இன்னும் நேரம் இருக்கு. அடுத்து நாரை கிணறு, அப்புறம் தாழையத்து , அப்புறம்.."
"போங்கப்பா , நாரை கிணருனு ஊரெல்லாம் இல்லை. அது பெரிய பொய்"
"இதோ பாருடி இந்த குட்டிய . வருஷா வருஷம் தாத்தா வீட்டுக்கு வரா, ஆனா ஜங்ஷன் எப்போ வரும்னு தெரியலை. உங்க வீட்டுல சூப்பர் வளர்ப்பு தான் போ!"
"அது சரி இப்போ மட்டும் எங்க வீடு உங்க கண்ணுக்கு தெரியுமே. லீவுல இருபது நாள் உங்க வீட்ல இருக்கும் போது சொல்லி குடுக்க வேண்டியது தானே ?"

"இஞ்சி மொரப்பா! கடல மிட்டாய்! எள் மிட்டாய்! அஞ்சு ரூவாய்க்கு மூணு!"
"காபி காபி ! இட்லி வடை போளி! சார் இன்னிக்கு காலைல போட்டது !

கேலிகளும் விற்பனை கூவல்களும் மாறி மாறி எதிரொலிக்க, வண்டி சக்கிரம் நெல்லை ஜங்ஷன் இல் நின்றது.

தூரத்தில், கூட்டத்தில் ஒரு வெள்ளை வேஷ்டி வெள்ளை sattai தெரிந்தது .
"அப்பா! இங்க இருக்கோம்"
"தாத்தா! தாத்தா! இந்த தடவை எனக்கு மட்டும் கதை சொல்லுங்க . நான் தான் first ரேங்க் எடுப்பேன். ரமேஷ் கிளாஸ்-ல டென்த் ரேங்க் தான். அப்புறம் எனக்கு தேன் மிட்டாய் வேணும்...

"வாம்மா! வாங்க மாப்பிள்ளை ! ரொம்ப எளச்சிட்டீங்க. வேலை அதிகமோ?
"எங்க மாமா.... உங்க பொண்ணு கல்யாணத்துல சட்ரசம் பரிமாரினதொட சரி. வீட்ல சமையலையும் பார்த்துட்டு, ஆபீஸ்க்கும் போயிட்டு வந்தே நான் பாதி துரும்பா ஏலசிட்டேன்."
"ஏம்பா அவங்களும் சொல்ரங்கனு கேட்டுட்டு இருக்கீங்களே! வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?"

ஆட்டோ மேம்பாலத்தை தாண்டி சென்ட்ரல் டாக்கீஸ் வரவும், ரமேஷ் கத்தவும் சரியாக இருந்தது.
"தாத்தா நொங்கு ! நொங்கு! அதோ நிக்கறான் வண்டிக்காரன்."
"டேய் ஆட்டோ-வை நிருதெல்லாம் முடியாது. நீ போப்பா.!"
"அப்போ கதை சொல்லுங்க"

தாத்தா தொண்டை செருமினார்,
"ஒரு காட்டுல ஒரு நரி.
தேவி அம்மா மடியில் இருந்து தலை வளைத்து தாத்தா வை பார்த்தாள்.அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் அவளது சின்ன முகத்தில் .
"ஒரு காட்டுல ஒரு நரி.
அதோட கதை சரி."

"அய்யோ இது நல்லாவே இல்லை. போங்க தாத்தா!"
"சரி தாத்தா வீட்டுக்கு போய் கதை சொல்லுவாங்க. அதோ சந்தி பிள்ளையார் கோயில் வந்திருச்சு.அடுத்து என்னது..? " அப்பா கேட்க,
"தாத்தா வீடு வந்தாச்சு! ஆச்சி நாங்க வந்துட்டோம்!"

தட தட...தட தட ..
திண்ணை எங்கும் காலடி மொட்டுக்கள் ...

0 Comments:

Post a Comment

<< Home