Tuesday, June 20, 2006

முதல் மரியாதை

நான் முதன் முதலில் தமிழில் எழுத ஆரம்பித்தது என் மூணாவது வயதில். நாங்க இருந்த வீட்டில், எங்களை போல் இன்னும் 6 ஒன்டி குடுத்தனங்கள். கீழ் வீட்டில் உள்ள வித்யா பெரியம்மா வாங்கும் தினத்தந்தி பேப்பரில் எனக்கு தெரிஞ்ச "ஏய்ஃஅகபே" கிருக்கி, அதுக்கும் ஒரு அர்த்தம் கற்பிச்சு பெரிய மனுஷி மாதிரி எல்லாரையும் ஒரு பெருமிதப் பார்வை பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது.

கிறிஸ்த்துவ பள்ளியில் படிச்சதுனாலயோ என்னவோ யோசிப்பதுகூட ஆங்கிலத்தில் தான். ஏதோ அந்த தாமிரபரணி கரையோரம் பிறந்த புண்ணியம், 24 வருஷம் மெட்ராஸ்ல குப்ப கொட்டியும் நல்ல தமிழ் மறக்கல.

பள்ளி படிப்பு முடிஞ்சு,10 வருஷம் கழிச்சு திரும்பவும் தமிழில் எழுத ஆரம்பிக்கறேன்.

எத்தனை குரைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீ குரு பொருப்பது உன் கடன்

என்று எல்லாம் வல்ல அந்த முருகன் மேல் பாரத்தை போட்டிட்டு ஆரம்பிக்கறேன்.

0 Comments:

Post a Comment

<< Home